எந்த ஒரு இயக்குனருக்கும் பிடிகொடுக்காமல் இருக்கும் விஜய் சேதுபதி..! காரணம் தெரியாமல் கதிகலங்கும் பிரபலங்கள்..!

நடித்தால் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று பலரும் சொல்லிக் கொண்டு திரியும் நடிகர்களின் மத்தியில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதை கரைத்துக் குடித்து வரும் ஒரு நடிகர் தான் விஜய் சேதுபதி.இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வருடத்திற்கு 10 முதல் 15 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகர் சினிமாவில் இருந்து திடீரென சிறிது காலம் பிரேக் விடப்போவதாக சமூகவலைத்தள பக்கத்தில் செய்திகள் வெளியாகிஉள்ளது சமீபத்தில்தான் நடிகர் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் தயாரிப்பில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய்சேதுபதி கைவசம் இருக்கும் திரைப்படம் என்றால் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் மாமனிதன், விடுதலை ஆகிய திரைப்படங்கள் ஆகும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேற எந்த திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கும் படி எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொடர்ந்து விஜய்சேதுபதி முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் சிறிது காலம் எந்த ஒரு திரைப்படத்தையும் கமிட் செய்து கொள்ளாமல் இருக்க திட்டமிட்டுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் சிறிது காலம் எந்த ஒரு தொந்தரவும் இன்றி ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாகவும் கொஞ்சம் சந்தோஷமாக தன்னுடைய வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஆகையால் இன்னும் சில நாட்களுக்கு விஜய்சேதுபதி திரைப்படத்தை நாம் திரையில் பார்க்க முடியாது என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version