செல்பி எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி மற்றும் துருவ் விக்ரம் இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை பொது இடத்தில் சந்தித்தால் அவர்கள் உடனே செல்பி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து விடுவார்கள்.

அந்த வகையில் விஜய் சேதுபதியும் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் பொது இடத்தில் சந்தித்தபோது அழகான செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் விஜய் சேதுபதி இவரது நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஆம் இவர் முதலில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் ரஜினிக்கு இலைமறை காயாக வில்லனாக நடித்து இருப்பார்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சியான் விக்ரமின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் துருவ் விக்ரம் இவரது நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய 2 பேரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 என்ற திரைப்படத்தில் துரு விக்ரம் மற்றும் சியான் விக்ரம் ஆக இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

7ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் பொது இடத்தில் சந்தித்தபோது செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்கள் மேலும் அந்த புகைப்படத்தை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அழகான மாமனிதரை சந்தித்தபோது மகிழ்ச்சி என்று கூறியுள்ளாராம்.

Leave a Comment

Exit mobile version