மாஸ் கதையை நிராகரித்த விஜய்.! படம் வெற்றி பெற்றபிறகு இயக்குனரை சந்தித்து சொன்ன வார்த்தைகள்.

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் சிறந்த இயக்குனர்களிடம் நன்கு கதையை கேட்டு விஜய் நடிப்பதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்புகிறது. இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வருகிறார்.

விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கி வருகிறது மறு பக்கமோ விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகொடுத்து தனது 66 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் ஒரு சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டு பின் அந்த படம் குறித்து அதே இயக்குனருடன் பேசி உள்ளார் அந்த தகவல் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது தளபதி விஜய் ஒரு இயக்குனருடன் கதை கேட்டார் என்றால் முழு கதையையும் கேட்பாராம்.

இதற்காக இரண்டு மணி நேரத்திற்கு மேல் டைம் எடுத்துக் கொள்வாராம் காரணம் படத்தில் எங்கேயாவது ஒரு சீன் நல்ல வலுவாக இருந்தால் போதும் அதுவே படத்தின் வெற்றிக்கு உதவும் என்பதை நன்கு உணர்ந்து உள்ளார் விஜய் அதனால் படத்தின் முழு கதையையும் கேட்பது வழக்கம் ஆனால் ஆரம்பத்தில் தளபதி விஜய் ஒரு சில படங்களின் கதையை பாதியிலேயே கேட்டுவிட்டு வேண்டாம் என மறுத்துள்ளார்.

அப்படி லிங்குசாமி தளபதி விஜய்யை சந்தித்து சண்டக்கோழி படத்தின் முழு கதையையும் சொல்லி உள்ளார் அது விஜய்க்கு சுத்தமாக பிடிக்காததால் கதை வேண்டாம் என கூறி உள்ளார் பின் விஷாலை வைத்து சண்டக்கோழி படத்தை எடுத்துள்ளார் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இன்னொரு சமயத்தில் லிங்குசாமியை சந்தித்து இந்த படத்தில் விஷால் போன்ற ஒருவர் நடிக்க வேண்டுமென இருக்கு.. அவர்தான் இந்த படத்திற்கு கரெக்டான சாய்ஸ் என தெரிவித்தாராம் இதை நீண்ட இடைவெளிக்கு பிறகு மேடை ஒன்றில் சொன்னார் லிங்குசாமி.

Leave a Comment