நவரச நாயகன் கார்த்தி நடித்த இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜயா.! தளபதி நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்…

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கடைசியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களை பெற்றது இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் தற்பொழுது  நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் விஜய் உடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மேலும் லியோ திரைப்படத்தை முடித்தவுடன் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது லேட்டஸ்ட் தகவல்கள் ஒன்று கிடைத்துள்ளது தளபதி 68 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும். கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் பல திரைப்படங்களில் நடிக்க முடியாமல் அந்த திரைப்படத்தில் வேறு ஒரு நடிகர் நடித்து ஹிட்டான சம்பவம் பல நடந்துள்ளது அந்த வகையில் தளபதி விஜய் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதேபோல் பல ஹிட் படங்களை தவறவும் விட்டுள்ளார். அப்படிதான் அவர் தவறவிட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் உள்ளத்தை அள்ளித்தா சுந்தர் சி இயக்கிய இந்த திரைப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கவுண்டமணி, ரம்பா, மணிவண்ணன், செந்தில் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் தானாம் தளபதி விஜய் சில காரணங்களால் இந்த திரைப்படத்தை நிராகரித்துள்ளார் அதன் பிறகு தான் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக காமிட்டானார். படமும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment