அஜித்தை காட்டிலும் விஜய் தான் டாப் ஹீரோ..! உதயநிதியிடம் வாதாடிய வாரிசு பட தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படத்தினை தில் ராஜ் என்பவர் தான் தயாரித்து உள்ளார் இவர் மிக பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மேலும் இவ்வாறு உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்று கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் தற்பொழுது படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல அஜித்தின் துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தினை உதயநிதி ரெட் ஜெயன்ட் அஜித்தின் துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்கிறது. இந்த இரண்டு ஹீரோக்களும் நேருக்கு நேராக 8 வருடங்களுக்கு பிறகு மோதுவதன் காரணமாக இவற்றை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த இரண்டு திரைப்படங்களும் சம அளவில் தியேட்டர்கள் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்து உள்ளார் இதனிடையே தற்பொழுது தயாரிப்பாளர் தில்ராஜி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தமிழ்நாட்டில் தளபதி விஜய் தான் மிகப் பெரிய ஸ்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

அதேபோல அவருக்கு அடுத்து தான் அஜித் இருக்கிறார் ஆகையால் சம அளவில் தியேட்டர் பிரித்துக் கொடுப்பது மிகவும் தவறான செயல் அவை பிசினஸ் என்பது நன்றாகவே தெரிகிறது ஆகையால் விஜய் திரைப்படத்திற்கு அதிக அளவு தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை பார்த்து கேட்டிருக்கிறேன் என தில்ராஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தில் ராஜி அவர்களின் வார்த்தை அஜித் ரசிகர்களை மிகப்பெரிய கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் சமூக வலைதள பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட அதிக அளவு வாய்ப்புள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.

Leave a Comment