விஜய் மனதை குளிர வைக்க அஜித்தை மோசமாக விமர்சனம் செய்த தயாரிப்பாளர்.! பிறகு மீண்டும் அஜித் காலில் விழுந்த தயாரிப்பாளர் நடந்தது என்ன தெரியுமா.?

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் அஜித்தை பற்றி பல சினிமா பிரபலங்கள் பேட்டியில் கூறியதை நாம் கேட்டுள்ளோம் இந்தநிலையில் அஜித் அவர்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் முகத்தை கூட பார்க்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.

அஜித் அதிகமாக கோபப்பட கூடியவர் பலரும் கோபப்பட்டு ஏதோ செய்வார்கள் ஆனால் அஜித்தின் கோபம் வித்தியாசமாக இருக்கும் அஜித் யார் மீதாவது கோபம் பட்டால் அவர்களிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டு அவர்களை விட்டு விலகி செல்வார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஏ எம் ரத்னம்.

இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு அஜீத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சி செய்தார் ஆனால் அஜித் கால்ஷீட் கிடைக்கவில்லை அதனால் அஜித் மீது செம காண்டில் இருந்து வந்துள்ளார் ரத்தினம் இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகிய கில்லி திரைப்படத்தை ரத்தினம் தான் தயாரித்திருந்தார்.  கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு படத்தை தயாரிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் மனதை குளிர வைக்க வேண்டும் என்பதற்காக அஜித்தை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் ரத்தினம்.

அப்பொழுது அஜித் சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என பேசினார் என கூறப்படுகிறது ஆனால் இது அஜித் காதுக்கு சென்றது ஆனால் அஜித் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இந்த நிலையில் இந்தியன், தூள், கில்லி, 7ஜி ரெயின்போ காலனி என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஏ எம் ரத்னம். கில்லி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்த am ரத்தினம் தொடர்ந்து ஏழு திரைப்படங்கள் வரை தோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு ஆளே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார் என அஜித்தை  கூறிய ரத்தினம் வேறு வழியில்லாமல் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு சென்றார் ஆனால் அஜித் அவர் பேசிய அனைத்தையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ஏ எம் ரத்னம்   நிலைமையை புரிந்து கொண்டு அவர் தயாரிப்பில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்தார் அந்த திரைப்படம் தான் ஆரம்பம்.

ஆரம்பம் திரைப்படம் பெரிதாக தயாரிப்பாளர் ரத்தினத்திற்கு  திருப்தி கொடுக்காததால் மீண்டும் தொடர்ந்து இரண்டு படங்கள் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்தார். என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய திரைப்படங்கள் ரத்தினத்திற்கு மறுவாழ்வு கொடுத்தது. இந்த நிலையில் தன்னை வசைபாடிய அவர்களுக்கு கூட மறு வாழ்வு கொடுத்தவர் அஜித்குமார் என்று பலரும் சினிமா வட்டாரத்தில் கூறி வந்தார்கள்.

Leave a Comment