பீஸ்ட் படத்தை முடிச்சாச்சு.. அடுத்த படத்தில் நடிக்க தேதியை குறித்த விஜய்.?

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார். சமீப காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ரெடியாக இருக்கிறார். மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் உடன் கை கோர்த்தது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து செல்வராகவன், சதீஷ், அபர்னா தாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நடித்து உள்ளனர் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் எதிரி உள்ளது நெல்சன் திலிப் குமார் படங்கள் என்றாலே வித்தியாசமாக இருக்கும்.

அது போல திரைப்படமும் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் கோடை மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கொடுத்து ஒரு புதிய படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

ஆனால் இந்த படத்தின் சூட்டிங் எப்போது தொடங்கும் என்பதே தளபதி ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது தளபதி விஜயின் 66 வது படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment