40 வருடங்களாகியும் தனது தங்கையை மறக்காத விஜய்.! இவருடைய செயலால் மன உருக்கத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வரும் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் தனது ரசிகர்கள் மூலம் பல உதவிகளை செய்து ஏராளமான ஏழை, எளிய மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

அப்படி அவர் தனது தங்கையின் மீது கொண்ட பாசம் யாருக்கும் தெரியாத ஒன்றாகும் விஜய்யின் அம்மா, அப்பா விஜய் மற்றும் அவருடைய தங்கையின் பாசத்தை பற்றி பலமுறை கூறியிருந்தாலும் இதனைப் பற்றி விஜய் ஒரு இடத்தில் கூட கூறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இவரின் பாசத்தின் நிகழ்வாக அவர் செய்து வரும் சம்பவம் மன உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது விஜய் அவர் தங்கையான வித்யா மீது அதிக அளவு பாசத்தை வைத்திருப்பவர் இவ்வாறு தன்னுடைய ஒன்பதாவது வயதில் அவரது தங்கைக்கு ஏற்பட்ட லுக்கிமியா என்னும் நோயால் அவரை இழந்தார். தனது கண்முன்னே தங்கை என் உயிர் போனதை தாங்க முடியாத காரணத்தினால் சில காலங்கள் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

அதன் பிறகு தான் விஜய் மிகவும் அமைதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு 40 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவர்களின் நினைவில் வித்யா இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது விஜய் அரசியலில் ஆர்வம் கொண்டுள்ளதால் விரைவில் அரசியலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார். எனவே விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகத்தின் மூலம் உள்ள ஆட்களை வைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் உள்ள ஒரு பள்ளியை நடத்தி வருகின்றனர்.

அப்பள்ளி விஜய்யின் தங்கை நினைவாக வித்யா இளைய தளபதி என்ற பெயரில் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர் தற்போது அந்த ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள் தேர்வு விகிதத்தில் சாதனை படைத்துள்ளனர். இதனை அறிந்த விஜய் பள்ளியை குறித்து ஒரு முடிவு எடுத்துள்ளார் அதன் விளைவாக விஜய் நிர்வாகிகளை அழைத்து அவ்பள்ளிக்கு தேவைப்படும் பணத்தை இனிமேல் நானே பார்த்துக்கொள்கிறேன்.

நீங்கள் இனி யாரிடமும் கையேந்த வேண்டாம் எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளாராம் மேலும் இந்த பள்ளியைநல்ல முறையில் நடத்த வேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளாராம் இவ்வாறு தனது தங்கை வித்யாவின் மீது இருக்கும் பாசத்தை விஜய் இப்படி வெளிப்படுத்தியுள்ளார் என்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Leave a Comment