கடன் பிரச்சனையால் பிரபல தயாரிப்பாளர் வலையில் சிக்கிக் கொண்ட விஜய் பட நடிகைகள்..! திடீரென வெடித்த உண்மை..!

சினிமாவை பொருத்தவரை பல காலங்கள் கழித்து சில உண்மைகள் வெடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் விஜய் திரைப்படத்தில் நடித்த நடிகைகள் பற்றிய விவரம் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது விஜய் படத்தில் நடித்த இரண்டு நடிகைகள் பல நெருக்கடி காரணமாக தயாரிப்பாளர் ஒருவரிடம் சிக்கி தவித்ததாக ஒரு செய்தி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது இயக்குனர் செல்வ பாரதி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய் திரைப்படம் ஆனது விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் ரம்பா மற்றும் தேவயானி ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்திருப்பார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது அது மட்டும் இல்லாமல் ரம்பா தேவயானி ஆகிய இருவருக்கும் இந்த திரைப்படத்தின் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது.

அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் உருவாகிவிட்டது இதனால் ரம்பா அவர்கள் 3 ரோசஸ் என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ரம்பா லைலா ஜோதிகா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்து விட்டது

அதன் பிறகு தேவயானி கணவர் ராஜகுமாரன் இயக்கத்தில் உருவான காதலுடன் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார் இந்த திரைப்படத்தில் முரளி அப்பாஸ் தேவயானி போன்றவர்கள் நடித்திருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படமும் படு மோசமாக தோல்வி அடைந்தது.

ஆனால் ரம்பா தேவயானி ஆகிய இருவரும் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் கடன் வாங்கி தான் திரைப்படத்தை தயாரித்து இருந்தார்கள் மேலும் இவர்கள் கொடுக்க வேண்டிய தேதியில் சரியான முறையில் பணத்தை தர முடியவில்லை அதன் பின்பு தயாரிப்பாளர் இவர்களை அவருடைய சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று தயாரிப்பாளர் தன் கஸ்டடியில் வைத்துக் கொண்டார்.

பின்னர் பணத்தை கொடுத்த பிறகு தான் இவர்கள் இருவரையும் விடுவித்தாராம் இவ்வாறு நடந்த செய்தியானது தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment