அப்பாவை கைவிட்ட மகன்.! கடைசியில் சீரியலில் தஞ்சம் அடைந்த பரிதாபம்.. எஸ்.ஏ.சி-க்கு இப்படி ஒரு நிலைமையா…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தற்போது இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது காஷ்மீரில் நடிபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அப்டேட் அவபோது வந்து கொண்டே இருந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

பல நாட்களாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேடிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது இந்த பிரமோ வீடியோ. இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் அவருடைய அப்பாவான எஸ்.ஏ சந்திரசேகர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தையை விட்டு பிரிந்து தனது மனைவி பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறாராம் நடிகர் விஜய்.

இதை அறிந்த நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யை கழுவி ஊத்தி வந்தனர் அதாவது ஊருக்கு அப்பா புள்ள பாசத்த கூறுவதை நிறுத்தி விட்டு முதலில் பெத்த அம்மா அப்பாவிடம் பேசுங்கள் என்று கூறி வந்தனர் இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் தனது மகன் தன்னை விட்டுப் பிரிந்த வருத்தத்தில் இருந்தாலும் பலமுறை பல பேட்டிகளில் அவருடைய நினைவுகளை கூறி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மகன் கை விட்டாலும் தன்னுடைய விடா முயற்சியினால் எப்படியாவது முன்னுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று எண்ணி தற்போது சீரியலில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் ஒரு புதிய தொடரில் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் இது உண்மையான தகவலா என்று தெரியவில்லை விரைவில் அவர் நடிக்கப் போகும் சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version