விஜய் என்னிடம் சிக்க வேண்டியது கடைசி நொடியில் தப்பித்து விட்டார்.? புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  படத்தை மிகப் பிரமாண்ட பொருட்ச அளவில் செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.  லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக்  திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் வரும் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளும் ஹாலிவுட் இருப்பதாகவும்.  விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  நடித்து வருகின்றனர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு  லியோ படக்குழு போஸ்டர் மற்றும் “நான் ரெடி” முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டது. இதுவரை மட்டுமே 15 மில்லியன் பேருக்கும் மேல் இந்த பாடலை யூடியூபில் கண்டு களித்துள்ளனர். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அப்படி தளபதி விஜயின் பிறந்தநாளுக்கு பிரபல நடிகை  லைலா விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர் சொன்னது  தற்பொழுது வைரலாகி வருகிறது.. விக்ரமன் இயக்கத்தில் சூர்யா லைலா நடித்த திரைப்படம் உன்னை நினைத்து இந்த படம் வெளிவந்து அப்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஆனால் முதலில் இந்த படத்தில் விஜய் தான் நடித்திருக்க வேண்டும் அந்த நிகழ்வை குறிப்பிட்டு விஜய் என்னிடம் இருந்து தப்பிவிட்டார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த தகவல் தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

vijay

Leave a Comment

Exit mobile version