தன்னுடைய சம்பளத்தை உயர்த்த முடிவு செய்த விஜய் தேவர்கொண்டா.! இப்ப எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.?

பொதுவாக எப்பொழுதும் நடிகைகளை விட நடிகர்களுக்கு தான் சினிமாவில் முக்கியத்துவம் இருந்து வருகிறது. அதேபோல நடிகர்கள்தான் பல கோடி சம்பளம் பெற்று வருகிறார்கள் மேலும் நடிகர்கள் வாங்கும் சம்பளங்களில் ஒரு பங்கு தான் நடிகைகள் பெற்று வருகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது விஜய் தேவர் கொண்டா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகர் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி,கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதால் இவரை வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாரித்து வருவதை தயாரிப்பாளர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர் வந்தால் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் லைகர் இந்த திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து குத்து சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் விஜய் தேவரகொண்டான் தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது ஆரம்ப காலகட்டத்தில் 5 கோடி,10 கோடி என்று சம்பளம் வாங்கி வந்த விஜய் தேவரகொண்டான் தற்பொழுது அவர் நடிப்பில் வெளியான லைகர் படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பெற்று உள்ளாராம்.

இவ்வாறு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவருக்கு புதிய திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருந்து வருகிறது மேலும் இதற்காக தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதற்காக திட்டம் போட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாமல் உள்ளதாக டோலிவுட் மீடியாவில் செய்திகள் வெளியாக உள்ளது.

Leave a Comment