தளபதியின் பிசினஸை தரமட்டமாக்கிய உதயநிதி..! ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிரபலம்..!

தளபதி விஜய் என்றால் அவர் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் அவருடைய திரைப்படத்தை வியாபாரம் செய்வதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டிருப்பது வழக்கமான செயல் என்பது மட்டுமில்லாமல் விஜய் திரைப்படம் எப்பொழுதும் லாபத்தை தரும் என்ற நம்பிக்கை தான் அதற்கு காரணம்.

இப்படி கொடிகட்டி பறந்து வந்த தளபதி விஜய்யின் பிசினஸை உதயநிதி அடியோடு சரித்தது பலருக்கும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது மேலும் இது குறித்து அரசியல் விமர்சனம் செய்யும் சவுக்கு சங்கர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பேட்டியில் பேசி உள்ளார் இவர் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பயப்படாமல் தென்னந் தெளிவாக பதில் கூறக்கூடியவர்.

இந்நிலையில் உதயநிதி பற்றி சமீபத்தில் ஒரு ஊடகம் ஒன்றில் பேசிய சவுக்கு சங்கர் தன்னுடைய தந்தை முதலமைச்சர் ஆன நிலையில் தமிழ் சினிமாவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது அது மட்டும் இல்லாமல் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து பெரிய திரைப்படங்களையும் உதயநிதி தான் வெளியிட்டு உள்ளார்.

அந்த வகையில் விஜய்க்கென ஒரு மிகப்பெரிய பிசினஸ் இருந்த நிலையில் தற்போது அதையும் உதயநிதி உடைத்து விட்டார். பொதுவாக தயாரிப்பாளர்கள் பல கோடி முதலீட்டில் படத்தை தயாரித்து வைத்திருந்தாலும் உதயநிதி சொன்னால் மட்டுமே திரையரங்கில் திரைப்படம் வெளியிட முடியும் அந்த வகையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் முதலில் கைப்பற்றிய நிலையில் திரைப்படத்தை அதிக தியேட்டரில் வெளியிடக் கூடாது என பெரிய இடத்தில் இருந்து  அழுத்தம் வந்ததாக சவுக்கு சங்கர் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மிகப்பெரிய நடிகரின் பிசினசை இப்படி நொறுக்க முடியும் என்பதை உதயநிதி தெரிவித்துவிட்டார் அந்த வகையில் அரசியல் மட்டும் இன்றி சினிமாவும் தற்பொழுது அவர்களுடைய கையில் தான் இருக்கிறது அந்த வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மற்றும் இந்தியன் இரண்டாம் பாகம் இரண்டு திரைப்படங்களையும் கூட உதயநிதி தான் வெளியிட உள்ளார் ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் தற்பொழுது உதயநிதி காலையே சுற்றி வருவதாக சவுக்கு சங்கர் கூறியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment