சென்னையில் வாங்கியது போதும்.. துபாயில் புதிய அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜய்..! எத்தனை கோடிகள் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இரண்டு கட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல பிரபலங்கள்.. இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் கலந்த ஒரு மாஸ் கமர்சியல் நிறைந்த ஒரு திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அதுவும் அந்த திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் அண்மையில் சென்னையில் 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான ஒரு பிளாட்டை வாங்கி உள்ளார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் துபாயில் ரூபாய் 65 கோடி மதிப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி உள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் போட்டு உடைத்து உள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment