உருவாகிறது விஜய் ஆண்டனியின் மாஸ் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. ‘நான்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார், அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

அதன்பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, எமன், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பாடகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோடியாக சாட்னா டைட்டஸ் அவர்கள் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை கமர்ஷியல் திரைப்படமாக இயக்கி இருப்பார் இயக்குனர் சசி. இந்த திரைப்படம் மற்றும் இதில் அமைந்த பாடல்கள் அனைத்தும் எதிர்பார்க்காத அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த திரைப்படம் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் 2வது பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

bichchaikkaran 2
bichchaikkaran 2

பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்குகிறது என தகவல் தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் ஆண்டனி, ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

Leave a Comment