நேற்று வீட்டை விட்டு வெளியே போன விஜய் ஆண்டனி மகள் மீரா.! விசாரித்ததில் கிடைத்த தகவல்

Vijay Antony daughter meera : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஓடிக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி இவரை தொடர்ந்து இவரது மனைவியும் சினிமா படங்களை தயாரித்து வந்தார். சினிமாவில் அதிக ஈடுபாடு காட்டினாலும் தனது  இரண்டு மகள்களையும் நல்லபடியாக படிக்க வைத்து பார்த்து வந்து உள்ளனர்.

இன்று அதிகாலை அவருடைய மகள் மீரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த செய்தி தற்பொழுது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மேலும் அவர் தூக்கிட்டு தற்கொலையை செய்து கொண்டதை அடுத்து நடமாடும் தடவியல் ஆய்வகத்துடன் நிபுணர்கள் வருகை தந்து அவருடைய அறையை சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டை விட்டு வெளியே சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த கோணத்தில் தற்போது விசாரணையை போலீஸ் ஆரம்பித்துள்ளனர் வீட்டை விட்டு வெளியே வந்த மீரா தனது தோழிகளை சந்தித்துள்ளார் அவர் யார் யாரை சந்தித்தார் என்று தொடர்ந்து விசாரணையை நடத்த தொடங்கி உள்ளனர்.

இவர் சென்ற இடத்தில் யாராவது இவரை தற்கொலைக்கு தூண்டினார்களா அல்லது வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா  என பல கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளது பிரேத பரிசோதனைக்கு பிறகு விஜய் ஆண்டனியின் மகளின் பிரேதம் அவரது வீட்டிற்கு எடுத்து வந்தப்பட்டுள்ளது.

meera
meera

இன்று மாலை கீழ்பாக்கம் மயானத்தில் அவருடைய உடலை முறைப்படி நல்லடக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. விஜய் ஆண்டனியின் மகள் மீரா  இறப்பு செய்தியை கேட்டு சினிமா மற்றும் ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.