இந்த வருடம் விஜய் ஆண்டனி மகள் கடந்த வருடம் யாருடைய மகள் இறந்தார் தெரியுமா.!

Vijay Antony: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது இந்த ஆண்டு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கும் கபிலனின் மகள் தூரிகை கபிலன் வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால் இவ்வாறு இந்த முடிவினை தூரிகை எடுத்தார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தூரிகை எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஷ் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்கிய நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தைரியமான, துணிச்சலான பெண்ணா இப்படி தற்கொலை செய்து கொண்டது என்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இவ்வாறு இந்த சூழ்நிலையில் 16 வயது மட்டுமே ஆகும் விஜய் ஆண்டனியின் மகள் பிஞ்சு குழந்தை உயிர் விட்டுள்ளார்.

Thurigai
Thurigai

அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் என கூறப்படுகிறது. விஜய் ஆண்டனியின் மகள் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

meera
meera

சின்ன வயதில் ஓடியாடி விளையாடாமல் நான்கு செவுத்துக்குள் இருந்து கொண்டு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் வீட்டிலேயே இருப்பதினாலும் ஏதாவது தோல்வி வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலும் சமீப காலங்களாக குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு இந்த சின்ன வயதிலேயே தற்கொலையை நிறுத்த வேண்டுமானால் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.