இவங்களோட வெற்றிக்கு இதுதான் காரணம்..! உண்மையை சூரத்தேங்காய் போல உடைத்த நடிகர் விஜய் சேதுபதி..!

vijay and rajini success reason : திரையில் துணை நடிகராகத் தனது முகத்தை காட்டி பின்னர் படிப்படியாக ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர்தான் நடிகர் விஜய் சேதுபதி.  இவருக்கு எந்த ஒரு கமிட்மெண்டும் கிடையாது. அது மட்டுமல்லாமல் தனக்கு பிடித்திருந்தால் எதையும் செய்வார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகரை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் நடிக்க வைத்து அழகு பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்கள். பொதுவாக விஜய் சேதுபதிக்கு ஒரு கதை பிடித்து விட்டால் போதும் அதற்கு உடனே ஓகே சொல்லிவிடுவார்.

அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம் தான் சீதக்காதி, கா.பெ ரணசிங்கம்.  நமது நடிகர் விஜய் சேதுபதியை பிடிக்காத ஆட்களே கிடையாது ஏனெனில் படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு எளிமையாக இருப்பாராம்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் வசுல் மன்னனாக வலம் வரும் ரஜினி விஜய் ஆகியோரின் வெற்றிக்கு காரணம் இதுதான் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அதாவது அவர் கூறியது என்னவென்றால். விஜய் மற்றும் ரஜனி ஆகிய இருவருமே படப்பிடிப்பு தளத்தில் வந்து விட்டால் போதும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல் அதில் மிகவும் கவனமாகவும் இருப்பார்கள் இதை நானே பல திரைப்படங்களில் பார்த்துள்ளேன். அப்போதுதான் தெரிந்தது இவர்களுடைய மாபெரும் வெற்றிக்கு காரணம் இதுதான் என்று.

மேலும் இவர்களின் திரைப் படத்தில் நான் வில்லனாக நடித்த போது கூட எனக்கு முழு உரிமையையும் அவர்கள் கொடுத்தார்கள். இந்நிலையில் மீண்டும் நான் விஜய் மற்றும் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Leave a Comment