ஒரே நாளில் மல்லு கட்ட போகும் விஜய் மற்றும் அஜித்..! பின்விளைவை முன்னிட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை..!

பொதுவாக பிரபல முன்னணி நடிகர்கள் தங்களுடைய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் பண்டிகை விடுமுறை நாட்களை குறி வைத்து அந்த நாளில் திரைப்படத்தை ரிலீஸ் செய்வது வழக்கமான ஒரு செயல்தான் அந்த வகையில் வருகின்ற பொங்கலுக்கு பல்வேறு திரைப்படங்கள் மல்லுக்கட்ட உள்ளது.

இதனிடையே தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள வாரிசு திரைப்படம் மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு தேதி இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

எது எப்படியோ திரைப்படம் கண்டிப்பாக வெளிவர தான் போகிறது என்ற காரணத்தினால் இந்த இரண்டு திரைப்படங்கள் வெளிநாடுகளில் முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டது அதன்படி இந்த திரைப்படங்கள் ஜனவரி 12ஆம் தேதி தான் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகப் போகிறது என முடிவு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பண்டிகை நாட்களில் தியேட்டர் களில் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பிக் கொள்ள தமிழக அரசாணது தியேட்டர் உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள் அந்த வகையில் 12ஆம் தேதி பண்டிகை நாள் இல்லை என்பதன் காரணமாக அந்த தேதியில் ஐந்து காட்சிகள் போட அனுமதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.

அந்த வகையில் ஜனவரி 12ஆம் தேதி மற்றும் 13 18 ஆகிய நாட்கள் மட்டும் கூடுதலான காட்சிகள் ஒளிபரப்ப  அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

theater-1
theater-1
theater-2
theater-2

Leave a Comment