அடிக்கடி துபாயில் ரகசிய சந்திப்பில் விஜய் அஜித்..! சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாகவும் மறக்க முடியாத நடிகர்களாகவும் தங்களுடைய நடிப்பின் மூலமாக சரித்திரம் படைத்த நடிகர் என்றால் அது விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தான்.  இவ்வாறு பிரபலமான இந்த நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

என்னதான் இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக தென்பட்டாலும் அவர்களுடைய ரசிகர்கள் எப்பொழுதும் எலியும் பூனையும் போன்று தான் இந்த வகையில் விஜய் திரைப்படம் வெளிவந்தால் அஜித் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பதும் அஜித் திரைப்படம் வெளிவந்தால் விஜய் ரசிகர்கள் அஜித்தை விமர்சிப்பதும் வழக்கமான செயலாக அமைந்துவிட்டது.

என்னதான் இவர்களுடைய ரசிகர்கள் விரோதியாக இருந்தாலும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சிறந்த நண்பர்கள் மட்டுமின்றி சென்னையில் அவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கம்தான் அந்த வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எப்பொழுதும் விஜய் அஜித் ஆகிய இருவரும் நேரில் சென்று தான் வாழ்த்துக்கள் கூறுவார்களாம்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் விஜய் அஜித் ஆகிய இருவரும் குடும்பத்துடன் துபாயில் சந்தித்துக் கொள்வது வழக்கம்.

ajithvijay
ajithvijay

அந்த வகையில் இவர்கள் சந்தித்த பொழுது எங்கள் குடும்பமும் சில நேரம் இருந்தது என்று கங்கை அமரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு திரைப்பட கதையை வெங்கட் பிரபு எழுதி வருவதாக கூறியுள்ளார் மேலும் இந்த திரைப்படம் பற்றிய பிரம்மாண்டமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கங்கை அமரன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ajithvijay
ajithvijay

Leave a Comment