விஜய் 65 : படத்திற்கு தெற்கில் இருந்து வில்லனை வரவைத்த படக்குழு.? அதிரடி ஆட்டம் ஆரம்பிக்க போகுது ரசிகர்களே.

தளபதி விஜய் எப்போதும் சினிமா உலகில் முன்னேறி கொண்டு செல்லும் நபர்.  சிறப்பான கதைகளையும் அதேசமயம் திறமையான இயக்குனரையும் கண்டறிந்து படத்தை கொடுப்பதால் ஒவ்வொன்றும் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்துவது விஜய்க்கு நல்ல பெயரை பெற்றுத் தருகின்றன.

இதனால் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை வைத்து உள்ளதோடு சிறந்த படங்களையும் கொடுத்து வருவதால் ரஜினிக்கு பிறகு இவர்தான் என கோலிவுட் வட்டாரங்கள் பேசுகின்றன. தற்பொழுது விஜய் நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விஜய் 65 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக திறமை வாய்ந்த நடிகர்களை களத்தில் இறக்கி வைக்கிறது படக்குழு அந்த வகையில் விஜயை தொடர்ந்து பூஜா ஹெக்டே மற்றும் மலையாளத்தில் ஒரு நடிகரை தற்போது வளைத்துப் போட்ட நிலையில் புதிதாக இந்த படத்தில் வில்லனாக களமிறக்க படக்குழு ஒருவரை தேடிவந்த நிலையில் புதிய நடிகர் ஒருவர் சிக்கியுள்ளார்

இது ஒரு பக்கம் இருந்தாலும் படத்திற்கான ஷூட்டிங் தடைபடக் கூடாது என்பதால் இருப்பவர்களை வைத்து தற்போது சூட்டிங் எடுத்து வருகிறது அந்த வகையில் முதலில் ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சென்னை சென்னை வந்துள்ள படகுழு அடுத்ததாக மால் போன்ற ஒரு ஜெட்டை போட்டு அதில் படத்தை எடுக்க தீவிரம் காட்டி உள்ளது இந்த நிலையில் வில்லனை தேர்வு செய்து விடலாம் என முனைப்பு காட்டி உள்ளது அந்த வகையில் அனைத்து திசையிலும் தேடி பார்த்தனர்.

இந்த நிலையில் இந்தியில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வரும் ஜான் ஆபிரகாம் விஜய்க்கு வில்லனாக களம் இறங்க படக்குழு திட்டமிட்டுள்ளது இதற்கு தயாரிப்பு நிறுவனம் தலை அசைக்க ஓகே தான் என்று எதிர்பார்க்கபடுகிறது ஆனால் சம்பள எவ்வளவு என்பது தான் கேள்வி குறியாக இருக்கிறது. அது மட்டும் சரியாக அமைந்து விட்டால் நல்லது.

மாஸ்டர் படத்தில் எப்படி விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் கதா பாத்திரத்தில் நடித்து பின்னி பெடலெடுத்தாரோஅதுபோல ஜான் ஆபிரகான்னுக்கும் இந்த திரைப்படம் நல்லதொரு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment