பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

சினிமா உலகில் பல வரலாற்று கதைகள் உருவகப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றனர் அந்த வகையில் தற்போது தமிழ் நாட்டு மக்களின் ஃபேவரைட் நாவலாக   இருந்தது பொன்னியின் செல்வன். இந்த நாவலை தழுவி மணிரத்தினம்  படமாக எடுத்துள்ளார்.

இந்த படம் நீளமாக இருந்த காரணத்தினால்  இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை பெரும்பாலும் 80, 90களில் படித்தவர்கள் தான் அதிகம் அதனால் இந்த படத்தை பார்க்க அவர்களே முதலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

படம் எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்த காரணத்தினால் அனைவரும் கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக சினிமா பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து இந்த படம் நல்ல வரவேற்பு பெறுவதன் காரணமாக வசூலும் எதிர்பார்த்ததை விட பயங்கரமாக அள்ளி வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆறு நாள் முடிவில் ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களும் எந்த ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது வெகு விரைவில் 500 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை இந்த திரைப்படம் நிகழ்த்தும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன்  பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு தனது பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. வாசிப்பு அனுபவத்தின் கூச்சமான பொன்னியின் செல்வன் நாவல் மணி சாரின் காட்சி வடிவில் திரை அனுபவத்தின் உச்சமாக மெருகேற்றி உள்ளது. நடிப்பு இசை ஒழிப்பது கலையென அத்தனை பரிமாணங்களிலும் உச்சம் தொட்ட இந்த திரைப்படம் தமிழ் திரை வரலாற்றில் மற்றொரு மணிமகுடம் என பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Comment