இப்ப விட்டா அப்புறம் பிடிக்க முடியாது சூர்யாவை வைத்து பக்கா ப்ளான் போட்ட விக்னேஷ் சிவன்..!

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.  அந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்து விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மனதில்  தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா சமந்தா போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்கள். மேலும் இந்த  திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவர்களுக்கு வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால்  சமீபத்தில் வெளியான காற்றுவாக்கில் இரண்டு காதல் திரைப்படம் கதை இருந்தது.

இந்த  திரைப்படத்தின் கதை விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவுக்கு தனியாக ஒரு கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  சமீபத்தில் சூர்யாவின் கால்ஷீட் கிடைத்ததால் அதை மிஸ் பண்ண கூடாது என்ற ஒரு கதை எழுதினால் ஒரு வருடமாகும் எண்ணத்தில் ஹிந்தியில் வெளியான சூப்பர் 26 திரைப்படத்தை ரீமேக் செய்து எடுக்கலாம் எண்ணத்தில் முடிவு செய்துள்ளார்.

அதன் மூலமாக தான் தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன, கார்த்திக் போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள்.  விக்னேஷ் சிவன் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படத்தை ரீமேக் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version