நயன்தாராவின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் விக்னேஷ் சிவன்.! அப்படி என்ன கேட்டார் தெரியுமா..

சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வருவதால் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இவர் தமிழில் அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தி வருகிறார்.

இப்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 6 கோடியில் இருந்து 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் உலா வருகின்றன. இவர் கடைசியாக நடிகர் ரஜினி உடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்து முடித்தார் அதனைத் தொடர்ந்து தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஜன், கனெக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சினிமா நேரம் போக மீதி நேரங்களில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சுற்றி திரிவதை வழக்கமாக வைத்துள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் பலர்  துபாய் நாட்டு அரசு வழங்கும் கோல்டன் விசாவை வாங்கி உள்ளனர்.

ஆனால் நயன்தாராவுக்கு அது கிடைக்காமலேயே போயுள்ளது சினிமா வட்டாரங்கள் மத்தியில் கோல்டன் விசா மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது தற்போது நயன்தாராவுக்காக கிடைக்காமல் இருப்பதால் அந்த ஆசையை நிறைவேற்ற விக்னேஷ் சிவன் கோல்டன் விசாவை வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

கோல்டன் விசா வாங்கினாள் பல பயன்கள் உள்ளது அது என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். நீங்கள் பர்மிஷன் இல்லாமல் துபாய் சென்று முதலீடு செய்யலாம், படிக்கலாம் என பல சலுகைகள் உள்ளன.

Leave a Comment