முதல்முறையாக தனது தாயை மேடையேற்றி அழகு பார்த்த விக்னேஷ் சிவன்- கண்கலங்கிய தருணம்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சிம்பு மற்றும் வரலட்சுமியை வைத்து போடா போடி என்னும் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படம் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை அதனை தொடர்ந்து அடுத்ததாக நானும் ரவுடிதான் என்னும் காமெடி சென்டிமென்ட் காதல் கலந்த ஒரு ஹிட் படத்தை கொடுத்தார்..

இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் பழகிய விக்னேஷ் சிவன் நயன்தாராவை அவரது காதல் வலையில் விழ வைத்தார். பின்பு விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஆறு ஏழு வருடங்களாக காதலித்து வந்து இரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து சில நாட்கள் வேலை மற்றும் சில நாட்கள் வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ வேண்டும் என வாழ்ந்து வருகின்றனர். தற்போது கூட விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.  இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் காதலன் என்பதால் தான் சினிமா உலகில் அவரும் பிரபலம் அடைந்துள்ளார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு ஐந்து திரைப்படங்களையே எடுத்துள்ள நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் இயக்க உள்ளார். மேலும் சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியா விளையாட்டுப் போட்டியின் நிகழ்வை விக்னேஷ் சிவன் தான் சிறப்பாக இயக்கி இருந்தார்.

VIGNESH
VIGNESH

இதற்காக அண்மையில் தமிழக அரசு சார்பில் அவரை கௌரவிக்கப்பட்டது. அப்போது மேடையில் பேசும்போது விக்னேஷ் சிவன் கண் கலங்கி உள்ளாராம். மேலும் விக்கி தனது தாயையும் மேடையில் ஏற்றி பெருமை படுத்தி உள்ளார். மற்றும் அவருடன் பணிபுரிந்த பலரையும் மேடை ஏற்றி சந்தோஷப்படுத்தி உள்ளார்

Leave a Comment