இணையத்தில் லீக்கானது விக்னேஷ் நயன் திருமண அழைபிதழ்..! அட கல்யாணம் திருப்பதியில் இல்லையா..?

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் எப்போது என்று ஊடகங்களில் இருந்து கோலிவுட் வரை கேள்வி எழுப்பி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல் சில தினங்களாக இவர்களது திருமண பேச்சு தான் அப்பொழுது செய்தியாக வெளிவந்தது கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது

இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக இவர்களின் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்தப் பத்திரிகையில் அவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

nayanthara
nayanthara

மேலும் அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.இவர்களது திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment