மொத்த ஆதாரத்தையும் காட்டி விமர்சனத்திற்கு வாய் பூட்டு போட்ட விக்கி நயன்தாரா தம்பதி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா இவர் தற்போது விக்னேஷ் சிவன் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு ஜாலியாக ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய செம்ம வைரல் ஆனது.

அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இனிமேல் புது படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று ஒரு தகவலையும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு திருமணம் ஆகிய நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானது எப்படி என ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது அது மட்டுமல்லாமல் இதனால் விக்கி மற்றும் நயன்தாரா இருவருக்கும் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

அதாவது மாற்றுத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரும் மீதும் புகார் அளிக்கப்பட்டது அதாவது சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இத்தனை நாட்களாக நயந்தாரா மற்றும் விக்னேஷ் இவனின் மாற்று தாய் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்து விட்டதாகவும் மாற்றத்தாய் குறித்து அவர்கள் டிசம்பரில் சான்றிதழ் வாக்கி உள்ளதாகவும் இவை அனைத்தையும் ஆதாரத்துடன்  விசாரணை கமிஷனரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விக்கி நயன்தாரா ஆகிய இரவுகளிடம் இருந்து இப்படி ஒரு பதில் யாருமே எதிர்பார்க்காத இந்த பதில்  தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment