தென்னிந்திய சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்த டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து சினிமா உலகில் தன்னை தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக தக்கவைத்துக் கொண்டவர். தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் பணியாற்றினார்.
பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது அதனையே இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்களது காதலை உறுதி செய்த நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர்.
இதனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதாக இருந்தனர். பின்பு இவர்களது திருமண அழைப்பிதழுடன் மகாபலிபுரத்தில் ஜூன் 9 திருமணம் என சமூக வலைதளங்களில் பத்திரிகை வெளியாகியது.
இவர்களது திருமணத்தில் சினிமா பிரபலங்களில் சில முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இவரது திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமண நிகழ்வை ஓடிடி நிறுவனமொன்று கைப்பற்றி உள்ளதால் திருமண நிகழ்வை பலரும் கண்டு களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணத்திற்காக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து உள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த புகைப்படத்தில் இவர்களுடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.