இராஜமௌலி,ஷங்கரை தொடர்ந்து பெரிய சம்பவம் பண்ண காத்திருக்கும் வெற்றிமாறன்.! பிரபல நடிகருக்கு கொடுத்த வாக்கு.?

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கால் பதித்த இயக்குனர் தான் வெற்றிமாறன் அதனைத் தொடர்ந்து சேவல் சண்டையை மையமாக வைத்து ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனர் வெற்றிமாறன் மாஸ் காட்டிவிட்டார்.

இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றது என்றே கூறலாம் மேலும் வடசென்னை,அசுரன் போன்ற பல திரைப்படங்களை இயக்கி தனுஷின் திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படங்களாக இந்த திரைப்படங்கள் அமைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறனிடம் நேராக கேட்ட சம்பவம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது  வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகிய இருவர்களும் ஒரே மேடையில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்களாம்.

அப்பொழுது தொகுப்பாளர் தனுஷை பார்த்து நீங்கள் வெற்றிமாறனிடம் ஏதாவது கேட்பது என்றால் கேட்கலாம் என்று சொன்னதும் உடனே தனுஷ் வடசென்னை 2 எப்போ அன்புவின் எழுச்சி எப்போ என கேட்டதற்கு வெற்றிமாறன் நல்ல கேள்வி உங்களுக்கு நிறைய படங்கள் இருக்கிறது ஹிந்தி படங்கள் எல்லாம் முடித்துவிட்டு வாருங்கள் உடனே ஆரம்பித்து விடலாம் என்று கூறினாராம்.

vetri maran
vetri maran

மேலும் அதில் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிளான் போட்டு வருகிறாராம் அது மட்டுமல்லாமல் வடசென்னை முதல் பாகத்தை விட வடசென்னை இரண்டாம் பாகம் மிகவும் அற்புதமாக இருக்கும் எனவும் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment