வெற்றிமாறன், சூர்யாவை நம்பி மிகப்பெரிய பட்ஜெட் போட்ட தயாரிப்பாளர்.! பட்ஜெட் பார்த்து வாய்பிளக்கும் சினிமா பிரபலங்கள்.

தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக வெற்றிக்குஏங்கிக் கொண்டிருந்த நடிகர்  சூர்யாவுக்கு “சூரரைப்போற்று” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. கொடுத்த வெற்றியை அடுத்தடுத்த திரைப்படங்களிலும் கொண்டு செல்ல அவர் டாப் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க உள்ளார்.

அந்தவகையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது 40வது இப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த திரைப்படத்தை பாண்டிராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் முடித்துவிட்டு அவர் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த  கூட்டணியில் முதன் முதலாக சேர உள்ளார் சூர்யா. அந்த வகையில் இவர் தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் உடன் இணைந்து  வாடிவாசல் திரைப்படத்தில்  விரைவில் நடிக்க உள்ளார் என செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியன.

அதன்பிறகு எந்த ஒரு தகவலையும் அறிவிக்காமல் படக்குழு இருந்து வருகிறது. தற்போது வெற்றிமாறன் விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து “விடுதலை” என்ற திரைப்படத்தை வேறொரு லெவலில் எடுத்து வருவதால் அதற்கு அதிக தீவிரம் காட்டி வருகிறார். இதை முடித்த பிறகு அவர் சூர்யாவை வைத்து “வாடிவாசல்” என்ற திரைப்படத்தை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

வாடிவாசல் திரைப்படத்தின் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க கலைபுலி தாணு தயாரிப்பாளராக இணைந்தார் இந்த படத்தின் கதைக்கு ஏற்ப பட்ஜெட் போடப்பட்டது. அவையில் இந்த படத்திற்கு 98 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டதாக தகவல் தெரிவிகின்றன. ஒரு படத்தின் பட்ஜெட் ரூ 98 கோடி என்பதால் அந்த படத்தின் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபமாம்.

இந்த திரைப்படத்திற்கு 98 கோடி பட்ஜெட் என்பதால் குறைந்தது 180 கோடியை தொட விட்டாலும் அதற்கு இணையாக வர வேண்டும் எனவும் தயாரிப்பாளர் எஸ் கலைப்புலி தாணுவும்  யோசித்து உள்ளாராம். 98 கோடியில் 48 கோடி வெற்றிமாறனும், சூர்யாவிற்கும் சம்பளமாக போய்விட்டதால் மீதி 50 கோடி பொருட் செலவில் படத்தை எடுக்க பட குழு திட்டம் தீட்ட வேண்டுமாம்.

இது பிரபல யூட்யூப் தளத்தில் பேசப்பட்டது அதை தற்பொழுது நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Leave a Comment