விடுதலை படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி தான் எனக்கூறி சூரியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்த வெற்றிமாறன்.!

தற்பொழுது நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தினை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு விடுதலை என பெயர் வைத்து உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் ஷூட்டிங் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் தற்பொழுது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விடுதலை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ராஜுவ்மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தற்பொழுது ஷூட்டிங்கின் பொழுது எடுக்கப்பட்ட ஸ்மால் வீடியோ ஒன்று ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் காடு என்றால் நமக்கு ஒரு புரிதல் இருக்கும், ஆனால் காடு நமக்கு வேறு ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று வெற்றிமாறன் பேசும் காட்சியும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது மழை பெய்யும் காட்சிகளும் உள்ளன.

viduthalai
viduthalai

இப்படிப்பட்ட நிலையில் அந்த வீடியோவில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தின் கதை நாயகன் சூரி என்றும் இந்த படத்தின் நாயகன் வாத்தியார் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி மீண்டும் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் சூரி முதன்முறையாக நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

viduthalai 1
viduthalai 1

அதோடு மட்டுமல்லாமல் இதில் சூரிய போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நிலையில் தன்னுடைய உடைமை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி உடல் பயிற்சி செய்யும் வீடியோக்களும் வைரலாகி வந்தது இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெருகும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment