நடிகை என்று கூட பார்க்காமல் மிகவும் மோசமாக நடந்து கொண்ட வெற்றிமாறன்.? தாங்க முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் ஓட்டம் பிடித்த பிரபல நடிகை.!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் வெற்றிமாறன் இவரது இயக்கத்தில் இறுதியாக விடுதலை என்ற திரைப்படம் வெளிவந்து பல கோடி வரை வசூல் செய்து வருகிறது. மேலும்  தனுஷை வைத்து தான் தனது திரைப்பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் இந்த பொல்லாதவன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் ஒரு சில திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.

அவ்வாறு பார்த்தால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் ஆடுகளம், அசுரன்,வடசென்னை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் பல விருதுகளையும் பெற்றது ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் மட்டும் ஒரு கலவையான விமர்சனத்தை தான் மக்களிடையே பெற்றது என்றே கூறலாம்.

இந்த திரைப்படத்தில் தனுஷ்,சமுத்திரக்கனி,அமீர்,டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா போன்ற பலரும் நடித்திருப்பார்கள் இவர்கள் நடிப்பை விட இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்புதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் யாருமே நடிக்க ஒத்துக் கொள்ளாத காட்சியை நடிகை ஆண்ட்ரியா ஏற்று நடித்தார்.

இந்நிலையில் வெற்றிமாறன் செய்த ஒரு காரியத்தால் அந்த இடத்தை விட்டு ஆண்ட்ரியா தெரித்து ஓடியதாக ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இயக்குனர் வெற்றிமாறன் ஒரு காலத்தில் சிகரெட் பிரியர் என்றே கூறலாம் ஒரு நாளைக்கு நூறு கணக்கான சிகரெட்களை புகைத்து தள்ளுவாராம் ஆனால் இப்பொழுது அந்த பழக்கத்தை விட்டு விட்டாராம்.

மேலும் வடசென்னை திரைக்கதை குறித்து ஆண்ட்ரியாவிடம்  பேசிக்கொண்டிருக்கும் பொழுது பேசிக்கொண்டே நிறைய சிகரெட்களை  பிடித்து தள்ளினாராம்.நேரமாக நேரமாக ஆண்ட்ரியாவால் கண்களையே திறக்க முடியவில்லையாம் ஒரு கட்டத்தில் கண்களில் இருந்து கண்ணீரும் வந்துவிட்டதாம். பொறுக்க முடியாத ஆண்ட்ரியா வெற்றிமாறனிடம் நான் போக வேண்டும் என சொல்லி கிளம்பி விட்டாராம்.

andriya
andriya

அதன் பிறகு வெற்றிமாறன் என்னாச்சு என கேட்டதற்கு என்னால் இங்கு இருக்க முடியவில்லை.சிகரெட் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை என கூறினாராம்.அதன் பிறகு வெற்றிமாறன் சிகரெட் துண்டை அமைத்துவிட்டு அவரிடம் வடசென்னை கதையை பற்றி கலந்துரையாடியுள்ளார் என இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment