தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்ட வெங்கட்பிரபு – கோபத்தில் அஜித் எடுத்த முடிவு.!

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் சமூக அக்கரை உள்ள படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்குமார் இப்பொழுதுகூட முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகிவரும் தனது 61 வது திரைப்படத்தில் விருவிருப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி என பலர் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களை அதிரடியாக புக் செய்து வைத்திருக்கிறார் அஜித். அதில் ஒருவராக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் ஒரு கதையை கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

மங்காத்தா திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றி அடைந்ததோ அதே போல மங்காத்தா 2 படத்தையும் உருவாக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர் இது குறித்து வெங்கட் பிரபுவும் அஜித்தும் அவ்வப்போது பேசிக் கொள்கிறார்களாம் அதன்படி பார்த்தால் நிச்சயம் மங்காத்தா 2 படத்தில் இருவரும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இது வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது இது இப்படி இருக்க மறுபக்கம் அஜித் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன ஆனால் அது வெறும் வதந்தியாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது வெங்கட்பிரபுவின் அப்பா கங்கை அமரன்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் எனது மகன் வெங்கட் பிரபு அஜித் விஜய்யை வைத்து மிக பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா அளவில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என அதிரடியாக கூறினார் கங்கை அமரன். இந்தச் செய்தி தற்போது இணைய தளபக்கத்தில் பகிரப்பட்டது.

இதனால் அஜித் அப்செட்டாகி விட்டாராம் மேலும் மங்காத்தா-2 திரைப்படத்திற்காக இணைவதற்கான பேச்சுகள் தற்போது கிடையாது தள்ளி வைப்பதாகவும் ஒரு சில தகவல்கள் வெளிவருகின்றன. அஜித் சஸ்பென்ஸாக வைத்திருந்து விஷயம் தற்போது வெடித்துள்ளது அஜித்தையும் வருத்தப்பட வைத்து உள்ளதாம்.

Leave a Comment

Exit mobile version