மீண்டும் மங்காத்தா போல் ஒரு திரைப்படம் வெங்கட்பிரபு அதிரடி.! ஹீரோ,ஹீரோயின் யார் தெரியுமா.?

தமிழ் திரை உலகில் வெற்றித் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு இவரது இயக்கத்தில் வெளியான சரோஜா,கோவா,மங்காத்தா,சென்னை 28 போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் அதிகம் வசூல் செய்துவிட்டது அதிலும் குறிப்பாக மங்காத்தா திரைப்படத்தில் அஜித்தை பைக் சீனில் வெங்கட்பிரபு காண்பித்தது மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் வெங்கட் பிரபு தமிழ் திரையுலகில் இயக்குனர்,பாடகர்,தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டு வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சிம்புவை வைத்து இவர் மாநாடு என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்தத் திரைப்படம் முடிந்துள்ளது என தகவல் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் தான் நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிம்புவின் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு புதிதாக ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளார் என சமீபத்தில் தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளி வந்ததை நாம் பார்த்திருப்போம் அதேபோல் முருகானந்தத்தின் ராக்போர்ட் நிறுவனம் மற்றும் வெங்கட்பிரபு வைத்திருக்கும் ப்ளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கூடிய சீக்கிரம் நடைபெற உள்ளது என சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வனுடன் மூன்று கதாநாயகிகளை வெங்கட் பிரபு நடிக்க வைப்பதாக திட்டமிட்டுள்ளாராம் அதில் சம்யுக்தா ஹெக்டே,ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகிய மூன்று கதாநாயகிகளை வெங்கட்பிரபு இதில் நடிக்க வைப்பதாகவும் பிரேம்ஜி இந்தத் திரைப்படத்திற்காக இசை அமைக்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

venkat prabhu
venkat prabhu

மேலும் இந்த தகவலை அறிந்த  ரசிகர் பலரும் படம் எப்போது தொடங்கப்படும் என கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Comment