மீண்டும் சேரவிடாமல் பாரதி தலையில் இடியை இறக்கிய வெண்பா.! ஆக்ரோஷத்தில் கண்ணம்மா மீண்டும் வெடித்த பிரச்சனை..! அப்போ இப்ப முடியாதா சீரியல் என கேள்வி எழுப்பிய ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்களிடைய நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஹேமா மாடியில் இருந்து குதிக்க போவதாக கூறி அனைவரையும் பதற்றத்தில் வைத்திருந்தார் அது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பா யார் என்று சொன்னால் மட்டுமே கீழே வருவேன் என பிடிவாதமாக இருந்தார்.

மேலும் ஹேமா வெண்பா  ஆன்ட்டி என்னுடைய அம்மாவை பத்தி தப்பா பேசினாங்க அதனால்தான் அவர் தலையில் கல்லை விட்டு எறிஞ்சேன் என கூறுகிறார் அவளை எப்படியாவது கீழே இருக்க வேண்டும் என மற்றவர்கள் போராடுகிறார்கள் அந்த சமயத்தில் பாரதி அங்கு வருகிறார் பாரதி முட்டி போட்டு நீயும் லட்சுமியும் என்னுடைய பெண் தான் எனக்கு பிறந்தவர்கள் தான் நான் தான் கண்ணம்மாவுக்கு தாலி கட்டின கணவன் என அனைத்தையும் கூறுகிறார் பாரதி.

ஆனாலும் ஹேமா அதை நம்பவில்லை லட்சுமி நீ சொல்லு என கூறுகிறார் லட்சுமியும் ஆமாம் நீயும் நானும் சகோதரி தான் நமக்கு அப்பா பாரதி தான் என கூறுகிறார் உடனே மனதை மாற்றிக் கொண்டு எப்படி இறங்குகிறது என தெரியவில்லை என கதறுகிறார் உடனே அகிலன் ஹேமாவை காப்பாற்றுவதற்காக மாடிக்கு ஏறுகிறான் ஹேமாவின் கையை கொடுத்து காப்பாற்றி கீழே இறங்குகிறான் அதற்கு பின்னர் ஹாஸ்பிடல் உள்ளே வந்ததும் பாரதி லக்ஷ்மி ஹேமா அருகில் போக அவனை தடுக்கிறார் கண்ணம்மா.

சௌந்தர்யா ஏன் கண்ணம்மா அவன்தான் உண்மையை ஒத்துக்கிட்டான்ல எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம் என சொல்ல இத்தனை வருஷமா நான் சொல்லி கேட்காத இவருக்கு திடீரென்று என்ன ஞானோதயம் எனக்கு அதற்கான காரணம் தெரியனும் எனக்கு என கூறுகிறார். அதேபோல் வேணும் கண்ணம்மா சொல்றது சரிதான் நீ இத்தன நாளா எங்க போன இங்க வந்த பிறகு எல்லார்கிட்டயும் பேசணும் என்று சொன்னீர்களே என்ன என கேட்கிறார் அதன் பிறகு மௌனம் கலைக்கும் பாரதி டிஎன்ஏ ரிசல்ட் எடுத்து காண்பிக்கிறார்.

லட்சுமி ஹேமாவும் எனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்று ரிசல்ட் வந்து இருக்கு என கூறுகிறார் இதனைக் கேட்டு அனைவரும் சந்தோஷமடைய வெண்பா மற்றும் அதிர்ச்சியில் இருக்கிறார் பாரதி கண்ணம்மா அருகில் சென்று உன்னை எவ்வளவு கஷ்டப் படுத்திட்டேன் என் வாழ்க்கையையும் வீணாக்கி விட்டேன் உங்களுக்கு நான் நல்ல அப்பாவாக நடந்துக்கள என லட்சுமி ஹேமா விட மன்னிப்பு கேட்கிறார் பாரதி. ஆனால் வெண்பாவோ எப்படியாவது உங்களை சேர விடக்கூடாது என  முடிவு கட்டுகிறார்.

உடனே பாரதி நிறுத்து அவசரப்படாத இந்த ரிசல்ட் ல என்னமோ நடந்து இருக்கு என கூறுகிறாள் சௌந்தர்யா ஷர்மிளா  இருவரும் வெண்பாவை அகற்றியும் அதையெல்லாம் சட்டம் பண்ணாமல் இந்த ரிசல்ட் தப்பா வந்திருக்கு பழசு எல்லாம் மறந்துட்டியா உன்னால குழந்தை பெத்துக்கவே முடியாது ஏற்கனவே இரண்டு முறை டெஸ்ட் எடுத்திருக்கோம் உனக்கு அதெல்லாம் தெரியாதா? என கேட்கிறாள் அதனால் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

வெண்பா சொல்வதைக் கேட்டு பாரதி அமைதியாக நிற்க கண்ணம்மா அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் உடனே நீ டெஸ்ட் எடுக்கும் பொழுது உங்க வீட்டில் யாருக்கெல்லாம் தெரியும் பாரதி .பாரதியும் அகிலனுக்கு மட்டும்தான் தெரியும் எனக் கூறுகிறார் அப்படி என்றால் அவன் தான் டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்திருக்க வேண்டும் என கூறுகிறார் இதனால் குடும்பமே அதிர்ச்சியில் உறைகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment