விஜய் கூடவே இருந்து இப்படி ஒரு காரியத்தை செய்த சரத்குமார்.? அதை நினைச்சு வருத்தப்படும் தளபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆனது ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் சொன்னாலும் குடும்ப ஆடியன்ஸ் படத்தை கொண்டாடியதால் தமிழ்நாட்டையும் தாண்டி  உலகளவில் பல்வேறு இடங்களில் வசூல் வேட்டை நடத்தியது.

இதுவரை மட்டுமே 270 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “லியோ” என்னும் படத்தில் நடிக்க உள்ளார் அதற்கான நடிகர், நடிகைகளை படக்குழு அண்மையில் தான் தேர்வு செய்தது. இது இப்படி ஓடிக் கொண்டிருக்க நடிகர் சரத்குமார்..

செய்த செயல் ஒன்று தற்போது விஜய்க்கு சற்று வருத்தத்தை கொடுத்திருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வாரிசு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது நடிகர் சரத்குமார் ஒரு சம்பவம் செய்து உள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி நடிகர் விஜயை வைத்து பல படங்களை தயாரித்து உள்ளார்.

இவர் மீண்டும் விஜயை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பலமுறை அவரிடம் இது குறித்து பேச முயன்று உள்ளார். ஆனால் விஜய் தொடர்ந்து சூட்டிங்கில் பிசியாக இருந்ததால் முயற்சிக்க முடியவில்லை.. இந்த நிலையில் தான் ஆர் பி சவுத்ரி நடிகர் சரத்குமாரை சந்தித்து விஷயத்தை கூறி உள்ளார்.

சரத்குமார் அவருக்கு உதவி செய்வதாக கூறி ஆர் பி சவுத்திரியை விஜயின் சம்பந்தமில்லாமல் வாரிசு படபிடிப்பு தளத்திற்கு வரவழைத்து உள்ளார். ஆர்பி சௌத்ரி விஜயிடம் புது படம் குறித்து பேசினாராம்.. இது நல்லபடியாக முடிந்தாலும் சரத்குமார் செய்த செயல் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment