துணிவை விட வாரிசு படத்தில் தான் அதிக சஸ்பென்ஸ் இருக்கிறது.! பயந்து போய் ரகசியத்தை உடைத்த இயக்குனர்…

நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித், விஜய் ஒரே தினத்தில் மோத உள்ளது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து வாரிசு மற்றும் துணிவு படங்களிலிருந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ஆனால் வாரிசு படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் வாரிசு ட்ரெய்லரை பார்த்து பலரும் இது ஒரு மெகா சீரியல் என்று கூறிய வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் வாரிசு படத்தின் டிரைலரை பார்த்த உடனே வாரிசு படத்தின் கதை இதுதான் என பலரும் கணித்து விட்டார்கள். அதாவது தனக்கும் தனது அப்பாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மகன் அப்பாவை விட்டு பிரிந்து வாழ்கிறார் அதன் பிறகு தன்னுடைய தாயின் மூலம் திரும்பவும் வீடு திரும்புகிறார் மகன்.

அதன் பிறகு தன்னுடைய அப்பாவின் பிசினஸை மகன் பார்த்துக் கொள்கிறார் இப்படி ஆரம்பித்த வாரிசு கதை கடைசியில் தன்னுடைய அப்பாவின் எதிரியை போட்டி போட்டு தோற்கடிக்கிறார் இதுவே இந்த படத்தின் கதை என்று கூற தொடங்கி விட்டார்கள்.

ஆனால் துணிவு படத்தின் டிரைலர் முழுக்க முழுக்க பேங்க் ராபரையை மட்டுமே காட்டியிருப்பார்கள் அதில் பல சஸ்பென்ஸ் இருப்பதாக எச் வினோத் தெரிவித்திருக்கிறார் அந்த வகையில் வாரிசு படத்திலும் நிறைய சஸ்பென்ஸ் இருப்பதாக வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி அவர்கள் தற்போது கூறியுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சஸ்பென்ஸ் இருப்பதாக மட்டும் தான் கூறினார்கள் ஆனால் வாரிசு படத்தில் சஸ்பென்ஸ் இருக்கிறது அந்த சஸ்பென்சையும் உடைத்துவிட்டார்  இயக்குனர் வம்சி. அதாவது துணிவை விட அதிகமான சஸ்பென்ஸ் வாரிசு படத்தில் இருக்கிறது அதிலும் குறிப்பாக எஸ் ஜே சூர்யா மற்றும் குஷ்பு கதாபாத்திரம் இன்னும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் குஷ்பு மற்றும் எஸ் ஜே சூர்யா வின் கதாபாத்திரம் என்னவென்று டிரைலரில் கூட காட்டவில்லை ஆகையால் ஒருவேளை எஸ் ஜே சூர்யா பிரகாஷ்ராஜின் மகனாக இருப்பாரோ என்று தற்போது கூறி வருகிறார்கள். ஆனால் குஷ்பூ எந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று கணிக்க முடியாமல் இருக்கிறது ஒருவேளை ராஷ்மிகா மந்தானாவின் அம்மாவாக கூட இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

ஆனால் துணிவு படத்தில் சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது என்று கூறியுள்ளார் எச் வினோத் அது யாரை வைத்து சஸ்பென்ஸ் இருக்கிறது என்று எந்த ஒரு தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு படுத்திருக்க தான் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் சஸ்பென்ஸ் இருப்பதாக கூறி வாரிசு படத்தின் மீது ரசிகர்கள் மத்தயில் எதிர்பார்ப்பை அதிகமாக்க வேண்டும் என்று சஸ்பென்சை உடைத்து உள்ளார் இயக்குனர் வம்சி. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் இரண்டு படத்திற்காகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Leave a Comment