செய்தியாளர்களை சரமாரியாக தாக்கிய வாரிசு பட குழு.! வெளிவந்தது உண்மை தகவல்…

சென்னை அடுத்து உள்ள பூந்தமல்லி அருகே  நடிகர் விஜயின் படப்பிடிப்பு தளத்தில் அனுமதி இன்றி மிருகங்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ட்ரோன் கேமராவை பறக்க விட்டு படம் பிடித்த தொலைக்காட்சி செய்தியாளர்களை படப்பிடிப்பு குழுவினர் காரில் கடத்திச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி படபிடிப்பு தளத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரம் மாடுகள் மற்றும் யானைகளை வைத்து உரிய அனுமதி இன்றி படப்பிடிப்பு நடத்துவதாக வந்த தகவலை அடுத்து தொலைக்காட்சி செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் செய்தியாளர்கள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வந்த ஊழியர்கள் செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன் வைத்திருந்த கேமரா ஆகியவற்றை பறித்துக் கொண்டு  அவர்களை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த நசரத்பேட்டை போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து பட குழுவினர் பறித்து வைத்திருந்த கேமரா ட்ரோன் ஆகியவற்றை மீட்டு  செய்தியாளர்களிடம் ஒப்படைத்தனர். தங்களை தாக்கியதாக செய்தியாளர்களும், அனுமதி இன்றி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ட்ரோன் கேமராவை பறக்க விட்டு  படம் பிடித்ததாக படப்பிடிப்பு குழுவினரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.

இரண்டு தரப்பினரும் அளித்த புகாரின் பெயரில் நசரத்பேட்டை போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment