சூர்யாவுக்கு முன்பே ஜோதியாவை ஒருதலையாக காதலித்த வாரிசு நடிகர்.! வெளியான தகவலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஜோதிகா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவருடைய நடிப்பை பார்த்து பலரும் இவரை நடிப்பின் அரசி என்றும் அழைத்து வந்தார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதியா இருவருமே பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே வராமல் இருந்த ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு உருவான 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவில் கொடுத்தார். அதன் பிறகு தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.

இந்த நிலையில் நடிகை ஜோதிகாவின் திருமணத்திற்கு முன்பு ஜோதிகாவை பிரபல வாரிசு நடிகர் ஒருவர் ஒரு தலை காதல் செய்து வந்ததாக தற்போது தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சிம்பு இவர் நடிகை ஜோதிகாவை ஒரு தலை காதல் செய்து வந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜோடியாக மன்மதன் மற்றும் சரவணன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் ஆகையால் ஜோதிகா மீது நடிகர் சிம்பு அவர்கள் காதல் வசப்பட்டார் ஆனால் தன்னுடைய காதலை ஜோதிகாவிடம் கூறவே இல்லையாம். அது மட்டுமல்லாமல் அந்த சமயத்தில் நடிகை ஜோதிகா அவர்கள் சூர்யா மீது தீவிர காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடைசி வரைக்கும் சிம்புவின் காதல் ஒரு தலை காதலாக முடிந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment