காசுக்காக தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்த நடிகை வரலட்சுமி.? அக்கட தேசத்தில் எகிறிய சம்பளம்.!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் 100 கோடி, 150 கோடி என சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஜோடி சேரும் நடிகைகளின் சம்பளம் லட்சக்கணக்கில் அல்லது ஒரு கோடி இரண்டு கோடி தான் அதிகபட்ச சம்பளமாக இருக்கிறது. ஏன் நடிகைகளுக்கு மட்டும் இவ்வளவு சம்பளம் கம்மியாக கொடுக்கப்படுகிறது என பல நடிகைகள் விவாதங்கள் வைத்துள்ளனர்.

ஆனால் என்னதான் சொன்னாலும் அவர்களுக்கான சம்பளமும் குறைவாகத்தான் இன்று வரையிலும் இருக்கிறது அதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது படத்தில் பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்கள் அல்லது ரெண்டு மூணு பாடலுக்கு வருவது, இல்லை என்றால் கொஞ்சம் சீன்களில் தலை காட்டி விட்டுப் போவார்கள்.

இதனால் அவர்களுக்கு கால் சீட் ரொம்ப குறைவு அதனால் சம்பளமும் குறைத்து தரப்படுகிறது. இது உண்மை என்றாலும் நடிகைகள் தனது அழகு இறங்குவதற்குள் நல்ல காசு பார்க்க வேண்டும் என நினைக்கிறார்கள் அதனாலோ என்னவோ ரெண்டு மூணு ஹிட் படங்களை கொடுத்து விட்டால் லட்சத்தில் இருந்து கோடிகளுக்கு தனது சம்பளத்தை உயர்த்தி விடுகின்றனர்.

அதுவும் அந்த நடிகைகள் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தால் மட்டுமே அதை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை வரலட்சுமி சரத்குமார் நிஜத்தில் எப்படி தைரியமாகவும் துணிச்சலாகவும் இருக்கிறாரோ அதையே படங்களிலும் செய்து காட்டி வருவதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக இருக்கிறார்.

ஹீரோயின், வில்லியாக நடித்து வந்த நடிகை வரலட்சுமிக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்று  வில்லி துணை நடிகை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் அந்த படங்களும் சூப்பர் ஹிட் அடிப்பதால் தற்போது அங்கு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கிறார் தற்பொழுது கூட தெலுங்கில் ஆறு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அவர் 50 லட்சத்திலிருந்து தனது சம்பளத்தை 90 லட்சம் ஆக உயர்த்தி மாஸ் காட்டி வருகிறார் மேலும் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment