பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததை கூறிய வரலட்சுமி.! அதற்கு ராதிகா சரத்குமார் என்ன சொன்னார் தெரியுமா.? வீடியோ உள்ளே

சில காலங்களாகவே பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல் எல்லா துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது, ஆனால் சினிமாவில் மட்டும் பாலியல் சீண்டல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது, படவாய்ப்பு வேண்டுமென்றால் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அவர்களின் உடல் பசியை போக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து சினிமாவிலும் இருக்கிறது.

சமீபத்தில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை #metoo மூலம் நடிகைகள் முதல் சாதாரண பெண்கள் வரை அனைவரும் பதிவிட்டு வந்தார்கள், இந்த நிலையில்  தமிழில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் இதுபோல் பிரச்சினையை சந்தித்து பற்றி  ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது தான் ஒரு வாரிசு நடிகை என்று தெரிந்தும் கூட எனக்கு வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்தார்கள், அதுவும் பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் அட்ஜஸ்ட் செய்யும் படி சிலர் என்னிடம் கூறினார்கள், ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்து விட்டேன்.

என்னை படுக்கைக்கு அழைத்து அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது, எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்கமுடியாது பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார், நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகையாக மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் பெண்கள் நல பாதுகாப்பிற்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இவர் பெண்கள் பாதுகாப்புக்காக சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார், இவரின் இந்த பேச்சுக்கு வரலட்சுமி சரத்குமார் சித்தியான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “சரியாகச் சொல்லியிருக்கிறாய் வரு” உனக்கு பலமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இப்படிக் கூறிய ராதிகா சரத்குமார் ட்வீட்டை ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்

 

Leave a Comment