வனிதாவின் முன்னாள் கணவர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வனிதாவின் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வனிதா ஆரம்ப காலகட்டத்தில் விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நிலையில் பிறகு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

மேலும் இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் கமெண்ட்கள் எழுந்திருந்தாலும் பிறகு குக் வித் கோமாளி மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவர்களுடைய திருமண மிகவும் கோலாலமாக நடைபெற்றது.

இவ்வாறு இதற்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் அது எதைப் பற்றியும் கவலைப்படாத வனிதா தற்பொழுது  தனது மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வனிதாவின் மூன்றாவது திருமணத்தை அவருடைய மகள்களை முன் நின்று நடத்தி வைத்தனர். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்கள் மட்டுமே பீட்டர் பாலுடன் வாழ்ந்து வந்த வனிதா சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.

VANITHA

அதன் பிறகு திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் ஏராளமான நேர்காணலில் பங்குப் பெற்ற வனிதா தன்னுடைய பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் வனிதா தொடர்ந்து பீட்டர் பாலுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் திருமண புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமானார்.

VANITHA 1

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பீட்டர் பால் மரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு இவருடைய மரண செய்தி பலரையும் அதிர்ச்சடைய வைத்துள்ளது. இவ்வாறு இந்த இறப்பிற்கு வனிதா போவாரா? மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியுள்ளது இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version