நான் தோத்து போய்ட்டேன்!! எலிசபெத்திடம் மன்னிப்பு கேட்கும் வனிதா விஜயகுமார்!! வைரலாகும் வீடியோ… கடவுள் இருக்கான் குமாரு..

vanitha vijayakumar asking apology to elizabeth video viral: சில மாதங்களுக்கு முன்புதான் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பீட்டர் பாலின் மனைவி மற்றும் அவரது மகன் என இருவரும் இவர்களது திருமணத்தை பெரிதாக எதிர்த்தனர். பீட்டர் பால் விவாகரத்து பெறாமலேயே வனிதா விஜயகுமாரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பீட்டர் பாலுவின் முதல் மனைவியான எலிசபெத் அவர்கள் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் துரோகம் செய்துவிட்டார் என காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவற்றை எதையும் கண்டுக்கொள்ளாமல், இப்படி பல சர்ச்சைகளை தாண்டி வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதை அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக கோவாவிற்கு சென்று அங்கு புகைப்படங்கள் எடுத்து இணைய தளங்களில் பதிவிட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது பீட்டர்பாலின உடல் நிலை மிக மோசமாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மனைவி ஸ்தானத்தில் இருந்து வனிதா விஜயகுமார் கையெழுத்து  விட முடியவில்லை.

எனவே அதற்காக எலிசபெத்திற்க்கும் அவரது மகனுக்கும் செய்தியை தெரிவித்தார். ஆனால் அவர்கள் இருவருமே எந்தவித ரெஸ்பான்சும அளிக்கவில்லை. மேலும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வனிதா விஜயகுமார் அவர்கள் உங்களை நான் எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் உங்களுக்கு பீட்டர் பாலுடன் வாழ விருப்பம் இருந்தால் நீங்கள் வாழலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை நீங்கள் மீடியாவிற்கு சென்றதால் தான் இப்படி ஒரு பிரச்சினை ஆகிவிட்டது நீங்கள் தனியாக என்னிடம் பேசி இருந்தால் பிரச்சினை ஆகாமல் இந்த விஷயம் முடிந்து இருக்கும் என அவர் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment