தூக்கி விட்ட நிகழ்ச்சியையே நார் நாராக கிழித்த வனிதா – தீயாய் பரவும் டுவிட்.!

சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி. மக்கள் பலரின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்பி சிறப்பாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைகளில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதை எடுத்து பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

இந்த ஐந்து சீசனையும் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட சில முக்கிய பிரபலங்களை வைத்து ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் சற்று சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்தாலும் சில வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட்  மக்கள் பலருக்கும் பிடிக்காமல் போகின்றன. மேலும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டாலும் அந்த டாஸ்கை போட்டியாளர்கள் விளையாடும் முறை மக்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.

பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் வனிதா. இவர் இதற்கு முன் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டவர் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் நன்றாக விளையாண்டு வந்த வனிதா திடீரென பாதியில் வெளியேறினார். மேலும் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொடங்கி வைத்த நிலையில் அவர் வெளியேறியதை அடுத்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வனிதா தற்போது பிக்பாஸ் அல்டிமேட் குறித்து புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை தகாத வார்த்தை ஆபாசம் என பார்ப்பதற்கே தகுதி இல்லாத நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நீங்கள் பார்த்து வந்தாள் உங்களை கொன்று விடும் எனவும் பதிவு செய்துள்ளார்.

Leave a Comment