பிக் பாஸ் கொடூரம் வனிதாவின் முகத்தில் தாக்கிய பிரதீப்பின் ரசிகர்.! ரத்தம் சொட்ட சொட்ட வனிதா வெளியிட்ட பதிவு.!

pradeep antony vanitha : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் வனிதா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் அடிக்கடி செய்திகளில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்தவர் அது மட்டும் இல்லாமல் இவர் பர்சனல் லைஃப் பல சர்ச்சைகளை சந்தித்தது இந்த நிலையில் தற்பொழுது வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் 7 தமிழ் சீசனில் கலந்து கொண்டார் தற்பொழுது நன்றாக விளையாடி வரும் வனிதாவின் மகள் ஜோவிகா இன்னும் பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி இவர் பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுக்கும் விதமாக விளையாடி வந்தார் ஆனால் இவரால் பெண்களுக்கு ஆபத்து என சக போட்டியாளர்கள் கூறியதால் பிரதீப் ஆண்டனி அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் பல ரசிகர்கள் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தார்கள். கமலுக்கு கண்ணு தெரியவில்லையா என பலரும் கேள்வி எழுப்பினார்கள் ஏனென்றால் அந்த அளவு பிரதிப் ஆண்டனிக்கு  சப்போர்ட் இருந்தது. தேவையில்லாமல் பிரதீப்  ஆண்டனியை வெளியே எடுத்து விட்டீர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமே இல்லை என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது இன்னும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிலையில் திடீரென பிக் பாஸ் வனிதா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரதீப் ஆன்டனி ரெட் கார்ட் குறித்து பல கருத்துக்களை முன்வைத்து வந்தார் வனிதா எந்த நிலையில் வனிதா தன்னுடைய சமூக வலைதள பணக்கமான எக்ஸ் வலைத்தளத்தில் அவர் கூறியதாவது நான் டின்னர் முடித்துவிட்டு வீடு திரும்பும் பொழுது பிரதீப் ஆண்டனியின் ரசிகர் ஒருவர் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா என முகத்தில் ஓங்கி ஒரு அரை விட்டார்.

அதுமட்டுமில்லாமல் ரெட் கார்ட் கொடுத்ததற்கு சப்போர்ட் பண்றீங்களா என சொல்லி சொல்லியே முகத்தில் தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய சகோதரி போலீசில் புகார் கொடுக்கலாம் என கூறினார் ஆனால் வனிதாவால் அடித்தவர் யார் என்று அடையாளம் காட்ட முடியாத அளவிற்கு அடித்துள்ளதால் வேண்டாம் என மறுத்து விட்டாராம் இதோ வனிதா வெளியிட்ட பதிவு.