வனிதாவின் மோசமான செயலால் கடுப்பாகி திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ

சீனாவில் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவியது இது மெல்ல மெல்ல பரவி அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து ஈரான் ஸ்பெயின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் மிக மிக வேகமாக பரவி வருகிறது, அதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒரு சில மக்கள் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல், வைரஸ் தாக்கத்தைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் வாகனங்களில் சுற்றிதிரிகிறார்கள்,.

அதனால் போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள், இந்த நிலையில் பிக்பாஸ் வனிதா ஊரடங்கு உத்தரவை மீறி காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றும் வீடியோ ஒன்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் சாலைகளில் ரசாயன கலவை கலந்த தண்ணீரை அடிக்கின்ற அதை வீடியோ எடுத்து முன்னுதாரணமாக தமிழ்நாடு மாநிலம் என குறிப்பிட்டுள்ளார், இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் நான் மட்டும் போலீசாக இருந்தால் ரோட்டில் வைத்து உன்னை அடித்து வீட்டிற்கு அனுப்பி இருப்பேன் என கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் விழிப்புணர்வை கொடுக்க வேண்டிய நீங்களே இதுபோல் செய்தால் மக்கள் என்ன செய்வார்கள் என கேள்வி கேட்டுள்ளார், வனிதா வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்குவதற்கு சென்றுள்ளார் என தெரிகிறது, ஏனென்றால் இவர் ஷாப்பிங் செய்துள்ளார் அந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

vanitha vijayakumar

Leave a Comment

Exit mobile version