குந்தவையை எச்சரிக்க கிளம்பும் வந்தியத்தேவன்.! வெளியானது Sneak Peek வீடியோ.!

தமிழ் திரையுலகமே மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் மிகவும் அற்புதமாக உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என பட குழு நம்புகிறார்கள்.

அதற்கு ஏற்றது போல் படக்குழு பல நகரங்களுக்கு சென்று புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதிலும் குறிப்பாக பார்த்தால் ஒரு பக்கம் இவர்கள் பல நகரங்களுக்கு செல்கிறார்கள் இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் பற்றியே அதிகமான புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் தற்பொழுதும் ஒரு Sneak Peek வீடியோவை பட வெளியிட்டுள்ளார்கள் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். ஆம் வந்தியத்தேவன்  நடுக்காட்டில் மாட்டிக் கொண்டு கட்டா கட்டா காட்டுக்குள்ள காட்டேரி பேய் இருக்கு காளி உன் பெயரைச் சொன்னால் காணாம போயிடுச்சு.

என கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்பி ஒரு புதிய வேஷத்தோடு வந்தியத் தேவனை சந்திக்கிறார் அப்பொழுது நம்பியை பார்த்த உடனே வந்தியத்தேவன் ஐயா யார் நீங்கள் என்று கேட்டுவிட்டு ஒரு சிறிய நேரம் அவரது மூஞ்சை உற்றுப் பார்க்கிறார் வந்தியத்தேவன் அதற்கு நம்பி நான் உன்னை பலி கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.

உடனே வந்தியத்தேவன் ஓய் நம்பி உடனே கட்டை அவிழ்த்து விடு அப்புறம் பலி கொடுக்கலாம் என கூறுகிறார் உடனே நம்பி தம்பி எப்படி கண்டுபிடிச்ச என கேட்க அதற்கு வந்தியத்தேவன் நீ வருவதற்குள் உன் தொப்பை வந்து விட்டது என்று கூறிவிட்டு மேலும் அவரிடம் ஒரு சில வார்த்தைகளை கூறிவிட்டு வந்தியத்தேவன் உடனே நீ ஆதித்ய கரிகாலரை தேடிச் செல்லும் நான் குந்தவி தேவியை பார்த்து எச்சரிக்கிறேன் என்று கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment