வானத்தைப்போல சீரியலில் நடிகரின் மூஞ்சில் காரி துப்பிய நடிகை.! இதுதான் காரணம் நடிகர் ஸ்ரீ விளக்கம்..

Serial actress: வானத்தைப்போல சீரியல் நடிகரின் முகத்தில் நடிகை காரி துப்பி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் வானத்தைப்போல.

அண்ணன் தங்கையின் பாச உறவினை மையமாக வைத்து உருவாக்கி வரும் தொடர் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அப்படி இந்த சீரியலில் அண்ணனான சின்ராசு மீது அதிக பாசத்தை பொழியும் தங்கையாக துளசி நடித்து வருகிறார். கதாநாயகியாக துளசி கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை மன்யா ஆனந்த். அதேபோல் சின்ராஸ் ஆக ஹீரோ கேரக்டரில் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஏராளமான கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதாவது, துளசி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை தெரிய வந்தவுடன் இதனால் அனைவருமே கோபத்திலிருந்து வருகிறார்கள். பிறகு ராஜபாண்டியும் அவருடைய அப்பாவும் சேர்ந்து துளசியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

நாள் சின்ராசு அவர்களிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி ராஜபாண்டியன் அப்பா சின்ராசின் முகத்தில் எச்சியை துப்பி விடுவார். இந்த அவமானம் தாங்க முடியாமல் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்று விடுகிறார் துளசி.

இவ்வாறு நடிகர் ஸ்ரீ மீது காரி துப்பியது நடிகர் கூறிய விபரம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொதுவாக இந்த மாதிரி எச்சியில் துப்பும் காட்சிக்கு பதிலாக சோப்பு நுரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நடிகர் ஸ்ரீ உண்மையாகத்தான் செய்ய வேண்டும் என சொல்லியிருந்தாராம். இதனால் நடிகர் ராஜபாண்டியன் அப்பாவாக நடிக்கும் மகாநதி சங்கர் என்னால் வேறு நடிகர் மீது துப்ப முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் பொழுது பொன்னியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் சாந்தியிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் தயங்கி இருக்கிறார் பின் ஸ்ரீ கேட்டதற்கு சாந்தினி முகத்தில் எச்சி துப்பி இருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் ஸ்ரீ கூறியதாவது, உண்மைதான் இதில் ஒன்றும் எந்த தப்பும் இல்லை. வெறும் பரபரப்புக்காக பண்ணவில்லை நான் சீரியல் நடிக்க ஆரம்பித்த பல வருடங்கள் ஆகிவிட்டது என் தொழில் மீது நான் காட்டுகிற உண்மையான அக்கறை தான் காரணம் என்று நம்புகிறேன். சினிமா சீரியல் இரண்டும் எனக்கு வேறு வேறு வேலை இல்லை திரையின் அளவில்தான் வித்தியாசம் காட்சிகள் எதார்த்தமாக அமைய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற உழைப்பை போட வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Comment