மீண்டும் சினிமாவில் நாய் சேகராக உருவம் எடுக்கும் வைகை புயல் வடிவேல்.!

தமிழ் திரையுலகில் என்றும் ரசிகர்கள் மனதில் காமெடிய மன்னனாக திகழ்ந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு செந்தில் கவுண்டமணிக்கு அப்புறம் வந்தவர் என்றாலும் அவர்கள் இருக்கும் பொழுதே அவர்களுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கியவர்.

இவர் கதாநாயகனாக 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தவர் அதனைத் தொடர்ந்து எலி,தெனாலிராமன் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்தது மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

இந்நிலையில் சினிமா பக்கமே வடிவேலு தலை காட்டவில்லை என்றாலும் அவர் நடித்த திரைப்படங்களில் காமெடி சீன்கள் இன்றும் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் மீண்டும் வைகைப்புயல் வடிவேலு சினிமாவிற்கு நடிக்க வர மாட்டாரா என காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு உற்சாக செய்தியாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவலில் நடிகர் வடிவேலு சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளாராம் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாகவும் அந்தத் திரைப்படத்திற்கு தலைப்பு நாய் சேகர் என வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வடிவேலு சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை, தலைநகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்நிலையில் மீண்டும் இவர் சினிமாவிற்கு வந்தார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானால் ரசிகர்கள் மிகவும் குஷி ஆகி விடுவார்கள் என்றுதான் கூறவேண்டும்.

vadivel
vadivel
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment