பிரபல இயக்குனரை அவன் இவன் என்று பேசிய வடிவேலு – கோபத்தின் உச்சிக்கே சென்ற சிஷ்யன்.?

இயக்குனர் சிம்புதேவன்னிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்து தற்பொழுது இயக்குனராகவும் வலம் வருபவர் நவீன். இவர் தமிழ் சினிமாவில் இதுவரை ஓரிரு திரைப்படங்களை மட்டுமே எடுத்துள்ளார் அந்த வகையில் முதலில் மூடர் கூடம் என்ற திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி அருண் விஜய்யை வைத்து அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இது தயார் நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் நவீன் அலாவுதீன் அற்புத கேமரா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை எடுத்து வருவதால் இவரது படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலுடன் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் வடிவேலுவை காட்டமாக பேசியுள்ளார் இயக்குனர் நவீன்.

சிம்புதேவனிடம் அசிஸ்டெண்டாக பயணித்தவர் நவீன். முதலில் சிம்புதேவன் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலுவை வைத்து எடுத்த திரைப்படம் இருபத்தி மூன்றாம் புலிகேசி என்ற திரைப்படத்தை எடுத்தார் அப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதன் இரண்டாவது பாகத்தையும் சிம்புதேவன் இயக்க முயற்சிகள் செய்தார் அந்த வகையில் 24 புலிக்கேசி என பெயர் சூட்டி படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் போனது.

ஆனால் இதற்கிடையில் சில பிரச்சனைகளை அந்தப் படம் கைவிடப்பட்டது. வடிவேலு ஒரு தடவை  இயக்குனர் சிம்புதேவன் படத்தின் ஒன்லைனை சொன்னால் அதை வைத்தே நானே படத்தை பெரிதாக்கினேன். இனி அவருக்கு ஒன்னும் தெரியாது என அவன் இவன் என சிம்புதேவனை தாறுமாறாக விமர்சித்தார்.

இதற்கு இயக்குனர் நவீன்  தற்பொழுது பகிரங்கமாக பதிலடி கொடுத்துள்ளார் எனது குரு சிம்புதேவனை அவன் இவன் என   பேசக்கூடாது. அவருக்கு ஒன்னும் தெரியாது என ரொம்ப ஓவராக பேசிவிட்டாய் வடிவேலுக்கு ரொம்ப அகந்தை  இருக்கு என கூறி தாறுமாறாக விமர்சித்தார் இயக்குனர் நவீன்.

Leave a Comment